சட்னி
தேவையான பொருட்கள் :
பெரிய வெங்காயம் : 2
தக்காளி : 2
வர மிளகாய் : 3
பூண்டு : 4 பல்
தேங்காய் : சிறிதளவு
புளி : சிறிதளவு ( இரண்டு விதை )
கறிவேப்பிலை : சிறிதளவு
ஜீரகம் : 1 டேபிள் ஸ்பூன்
கடுகு : ஒரு டேபிள் ஸ்பூன்
எண்ணெய் : 1 டேபிள் ஸ்பூன்
உப்பு
செய்முறை :
- ஒரு கடாயை அடுப்பில் பற்ற வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி ,ஜீரகம், கறிவேப்பிலை, வரமிளகாய்,பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
- பூண்டு வதங்கியவுடன் , நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து , நன்கு முருகளாக வதக்கவும் .(இந்த சட்னிக்கு வெங்காயம் நன்கு வன்தங்குவதால் தாழ் சுவையே கிடைக்கும் )
- வெங்காயம் வதங்கியவுடன் , நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு தக்காளி தண்ணீர் சுண்டும் வரை வதக்கவும் .
- இவற்றுடன் தேங்காய் துண்டுகளை சேர்த்து இரண்டு பிரட்டியவுடன், அடுப்பை நிறுத்தி விட்டு. கலவை நன்கு ஆறியவுடன் புளியையும் சேர்த்து , தண்ணீர் சேர்க்காமல் மைய அரைத்து , சிறிது கடுகு, கறிவேப்பிலை , தாளித்து கொட்டி , சுட சுட பஜ்ஜி அல்லது போண்டா அல்லது வடையுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
STEP BY STEP PICTURES :
- பூண்டு ,கறிவேப்பிலை ,வெங்காயம்,வர மிளகாய் ஆகியவற்றை வதக்கல்
- தக்காளி சேர்த்து வதக்குதல்
- இறுதியாக நன்கு அரைத்து சட்னி தயார் செய்தல்
No comments:
Post a Comment