EAT WELL LIVE WELL BE WELL

SUMMER BEAUTY TIPS

SUMMER BEAUTY TIPS

பொதுவாகவே கோடைகாலத்தில்,நமது முகம் பொலிவற்று இருக்கும் வெயில் காரணத்தினால். நாம் நம் முகத்தை சற்று கூடுதலாக கவனிக்க வேண்டும், அதற்க்கு இந்த face pack களை தொடர்ந்து கொண்டு வந்தால் ,முகம் எப்போதும் பொலிவாக இருக்கும்.

FACE PACKS:


கற்றாழை +ரோஸ் தண்ணீர் face பேக் :


கற்றாழை : 4 துண்டு  
ரோஸ் தண்ணீர் : 2 டேபிள் ஸ்பூன் , HOW TO MAKE ROSE WATER AT HOME


  1. கற்றாழை நன்கு அரைத்து ,அதில் 2 டேபிள் ஸ்பூன் ரோஸ் தண்ணீர்  சேர்த்தி கலக்கவும்.
  2. இதை முகத்தில் நன்கு பூசி 15 -20 நிமிடம் கழித்து கழுவினால் ,முகத்தில் உள்ள வெயிலினால் ஏற்பட்ட கருப்பு நீங்கும்,குளிர்ச்சி கிடைக்கும்,முகம் பொலிவாக இருக்கும்.
  3. வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தலாம்.

கற்றாழை +மஞ்சள் :


கற்றாழை :4 துண்டு 
கஸ்தூரி மஞ்சள் :2 டேபிள் ஸ்பூன்
ரோஸ் தண்ணீர் அல்லது  (தண்ணீர்) : சிறிது 
  1.  கற்றாழை நன்கு அரைத்து ,அதில் 2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் சேர்த்தி ,சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாக கலக்கவும்.
  2. இதை முகத்தில் நன்கு பூசி 20 நிமிடம் கழித்து கழுவினால்,முகம் நன்கு பொலிவு  பெறும் , கருப்பு புள்ளிகள் மறையும்.
  3. வாரத்திற்கு 1 முறை பயன்படுத்தவும் .

கற்றாழை+பப்பாளி :


கற்றாழை :3 துண்டு 
பப்பாளி பழ துண்டு :3 
மஞ்சள் : 1/4 டேபிள் ஸ்பூன் 

  1. கற்றாழை,பப்பாளி ஆகிய வற்றை நன்கு அரைத்து ,அதில் சிறிது மஞ்சள் சேர்த்து நன்கு கலக்கவும்.
  2.  இதை முகத்தில் நன்கு பூசி 30 நிமிடம் கழித்து கழுவினால்,முகம் நன்கு மிருதுவாகவும்,பொலிவாகவும் இருக்கும்.தோல் அதிக முதிர்ச்சி அடைந்தது போல் இருந்தால் இதை தொடர்ச்சியாக பயன்படுத்தினால் முகம் அழகு பெறும்.
  3. இதை வாரம் 3 முறை பயன்படுத்தவும்.
  4. இது எல்லா வகை (skin) தோலுக்கும் ஏற்றது . 

கற்றாழை + தக்காளி :


கற்றாழை :3 துண்டு 
தக்காளி :1/2 
மஞ்சள் தூள் :1 டேபிள் ஸ்பூன் 

  1. கற்றாழை, தக்காளி,மஞ்சள் தூள் ஆகிவற்றை நன்கு அரைத்து சிறிது தண்ணீர் ஊற்றி கலக்கவும்.
  2.  இதை முகத்தில் நன்கு பூசி 30 நிமிடம் கழித்து கழுவினால்,முகம் நன்கு மிருதுவாகவும்,பொலிவாகவும் இருக்கும்.முகத்தில் உள்ள இறந்த செல்கள் ,கருப்பு தோலை நீக்க உதவும்.
  3. இதை வாரம் 1 முறை பயன்படுத்தினால் போதும்.

கற்றாழை +  மாவு :


கற்றாழை : 3 துண்டு 
கடலை மாவு : 5 டேபிள் ஸ்பூன் 
தேன்  : 1 டேபிள் ஸ்பூன் 

  1. கற்றாழை நன்கு அரைத்து ,அதி கடலை மாவு ,தேன் சேர்த்தி கலக்கவும் .
  2. தண்ணீர் தேவை இல்லை .
  3.  இதை முகத்தில் நன்கு பூசி 20 நிமிடம் கழித்து கழுவவும் .
  4. முகத்தில் உள்ள எண்ணெய் பிசுக்கு,கரும்புள்ளி,வெள்ளை பொறுபொறுப்புகளை நீக்கும்.
  5. முகம் வெள்ளை ஆகும்.





    No comments:

    Post a Comment

    @templatesyard