சிக்கன் பிரியாணி (சீரக சம்பா அரிசியில் )
தேவையான பொருட்கள் :
- சீரக சம்பா அரிசி : 2 கப் (500 கிராம் )
- சிக்கன் (நாட்டு கோழி ): 1/2 கிலோ
- சின்ன வெங்காயம் : 1 கப்
- பெரிய வெங்காயம் : 1 (பெரிது)
- தக்காளி : 2 (பெரிய அளவு)
- மிளகாய் தூள் : 4 டேபிள் ஸ்பூன்
- மல்லித்தூள் : 2 டேபிள் ஸ்பூன்
- கரம் மசாலா : 1 டேபிள் ஸ்பூண்
- மஞ்சள்தூள் : 1/4 டேபிள் ஸ்பூன்
- பிரியாணி மசாலா தூள் : 1 டேபிள் ஸ்பூன் அல்லது( வீட்டில் அரைத்த கறிமசாலா தூள் 2 டேபிள் ஸ்பூன் )
- இன்ஜி பூண்டு விழுது : 2 டேபிள் ஸ்பூன்
- வாசனை பொருட்கள் (பட்டை : 2 ,ஏலக்காய் : 4 ,கிராம்பு : 2 ,பிரிஞ்சி இல்லை : 2 , கல்பாசி (சிறிதளவு ))
- தயிர் : 2 டேபிள் ஸ்பூன்
- பச்சை மிளகாய் :2
- கறிவேப்பிழை : சிறிதளவு
- எண்ணெய் ,நெய் :சிறிதளவு
- கொத்தமல்லி தழை, புதினா : சிறிதளவு
- உப்பு
செய்முறை :
- ஒரு குக்கரை அடுப்பில் வைத்து பற்றவைத்து,சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் ,வாசனை பொருட்கள் சேர்த்தி வதக்கவும்.அவற்றுடன் பச்சை மிளகாய் ,கறிவேப்பிழை ஆகிய வற்றை சேர்த்தி வதக்கவும்.
- இவற்றுடன் இன்ஜி பூண்டு விழுது சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும் .இவை வதங்கிய வுடன் நறுக்கிய சின்ன வெங்காயம்,பெரிய வெங்காயம் சேர்த்தி நன்கு பொன்னிறமாக வதக்கவும் .
- அவற்றில் நறுக்கிய தக்காளி சேர்த்தி , மசாலா தூள்களை(மல்லித்தூள்,மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,பிரியாணி மசாலா தூள் ) சேர்த்தி வதக்கவும், மசாலா பச்சை வாசனை போனவுடன் ,சுத்தம் செய்த சிக்கனை சேர்க்கவும்.
- சிக்கன் நன்கு வேகும் வரை வதக்கவும் , நன்கு வெந்த வுடன் ஒரு டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்தி கிளறிவிடவும் ,நறுக்கிய கொத்தமல்லிக்கு தழை,புதினா சேர்த்தி கிளறவும்.
- ஒரு கப் அரிசிக்கு 1/2 கப் தண்ணீர் போதுமானது . 2 கப் அரிசிக்கு 3 கப் தண்ணீர் சேர்த்தி கலவையுடன் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்,நன்கு கொதித்தவுடன் ஊறவைத்த அரிசியை சேர்த்தி கொதிக்க விடவும்.உப்பு சரி பார்க்கவும்.
- அவ்வபோது மூடி வைத்து ,மூடி வைத்து, கிளறி விடவும்.
- அரிசி நன்கு உடையும் பட்சத்தில் குக்கர் மூடி இட்டு விசில் போட்டு மூடி , அடுப்பை சிம் இல் வைத்து 7 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும். அல்லது ( 6 மற்றும் 7 step களை தவிர்த்து அரிசியை சேர்த்தவுடன் குக்கர் விசில் போட்டு ,ஒரு விசில் விட்டு இறக்கலாம்).
சுவையான சிக்கன் பிரியாணி தயார் .
No comments:
Post a Comment