EAT WELL LIVE WELL BE WELL

NEERPOOSANIKAI PARRUPU KULAMBU (KERALA STYLE)

நீர்பூசணிக்காய் பருப்பு குழம்பு 




தேவையானப் பொருட்கள் :

  1.   நீர்பூசணிக்காய் : சிறிய துண்டு 
  2.   துவரம் பருப்பு : 1 கப் 
  3.   தக்காளி : 2
  4.   தேங்காய் துருவியது : 1/2 கப் 
  5.    மஞ்சள் தூள் :1/4 டேபிள் ஸ்பூன் 
  6.    சாம்பார்த்தூள்  : 2 டேபிள் ஸ்பூன் 
  7.    சின்ன வெங்காயம் : 7
  8.    பூண்டு : 4
  9.    உப்பு 

   தாளிப்பு :

தேங்காய் எண்ணெய் (தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினால் கேரளா ஸ்டைல் அப்படியே இருக்கும் இல்லையெனில் மற்ற சமையல் எண்ணெய் உபயோகிக்கலாம்): 2 டேபிள் ஸ்பூன் 
கடுகு,ஜீரகம்,கறிவேப்பிலை : சிறிதளவு  
காய்ந்த மிளகாய் : 2 


செய்முறை :

1: முதலில் ஒரு கப் துவரம் பருப்பை தனியாக சிறிது மஞ்சள் தூள் சேர்த்து  வேக வைத்து எடுத்து கொள்ள வேண்டும்.
2: வேறொரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி நீர்பூசணிக்காய் தக்காளி ,சாம்பரத்துள்,உப்பு சேர்த்து வேக வைக்க வேண்டும் (காய் வேகும் அளவிற்கு தண்ணீர் ஊற்றினால் போதுமானது)
3: காய் வெந்தவுடன் அதில் வேகவைத்து பருப்பை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
4:அக்கலவை  நன்கு கொதித்தவுடன் 1/2 கப் தேங்காய் ,சிறிது ஜீரகம் சேர்த்து நன்கு அரைத்து , சாம்பாருடன் சேர்க்கவும் . தேங்காய் ஊற்றியவுடன் சாம்பார் ஓரிரு கொதி வந்தவுடன் இறக்கி வைத்து விடவும்.
5: வேறொரு பத்திரத்தில் தளிப்புக்கு தேவையான தேங்காய் எண்ணெய் ஊற்றி சிறிது கடுகு சேர்த்து, ஜீரகம் சிறிது, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து நன்கு பொரிந்தவுடன், நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும் .
6: இந்த தாளிப்பை சாம்பாருடன் சேர்த்து கலக்கி உப்பு சரி பார்த்து இறக்கினால் சுவையான நீர்பூசணிக்காய் பருப்பு சாம்பார் தயார் . 
    

No comments:

Post a Comment

@templatesyard